இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். By CMN Saleem( Editor-SAMUGANEETHI MURASU)
இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். By CMN Saleem( Editor-SAMUGANEETHI MURASU) முதல் சம்பவம் : டெல்லியை தலைநகராகக் கொண்டு 651 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை ஐரோப்பாவில் இருந்து வியாபாரம் செய்ய வருவது போல கி.பி.1600 இல் கால் பதித்து அடுத்து வந்த 257 ஆண்டுகளில் அதாவது கி.பி.1857 இல் முழு இந்தியத் துணை கண்டத்தையும் முஸ்லிம்களிடம் இருந்து பிரிட்டிஸ் அரசின் கூலிப் படையாக செயல்பட்ட கிழக்கு இந்திய கம்பெனி அபகரித்துக் கொண்டது. ஆட்சி அதிகாரம், நிலை நிறுத்தப்பட்டிருந்த ஷரீஅத் சட்டம், மொழி, முதல் நிலை குடிமக்கள் என்ற அந்தஸ்து ஆகிய அனைத்தும் பறிபோயின. அது முஸ்லிம் சமூகத்தை 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்னோக்கி கொண்டு சென்றது. இரண்டாவது சம்பவம் : 90 ஆண்டுகள் கழித்து 1947 இல் பிரிட்டலிருந்து இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தில் இன மற்றும் ஆதிக்க வெறியால் உந்தப்பட்ட சிலரால் பின் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. ஒரே சமூகமாக இருந்த 25 வ...